திருக்கோயில் காட்சிகள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

அழகன் குளம் ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழகத்தின் பண்டைய துறைமுகங்களுள் ஒன்று அழகன் குளம் ஆகும். இதுஇலங்கை நாட்டிற்கு வெகு அருகில் உள்ளது. இவ்வூர் துறைமுகத்தின் வழியாகத்தமிழர்கள் ரோமன் போன்ற பல வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்புகொண்டிருந்துள்ளனர்.இங்கு வைகை ஆறு கடலுடன் கலக்கின்றது. அவ்வாறு கலக்கும் வைகைஆற்றுடன் கடலும் இணைந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடல்நீர் இவ்வூருக்குள் ஊடுறுவி வருகின்றது. இதன்முலம் வற்றாத உயிர் நதியாகஇவ்விடத்தில் வைகை ஆறு விளங்குகின்றது.

இயற்கையான துறைமுக அமைப்பைப் பெற்றிருக்கும் இந்த அழகன் குளம்தமிழகத்தின் பழைய துறைமுகங்களின் வரிசையில் குறிக்கத்தக்கதாக உள்ளது. மருங்கூர்ப்பட்டிணம் என்பது இதன் சங்ககாலப் பெயர் ஆகும். நற்றிணையில்இவ்வூர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது.
இது அகழ்வாய்வுக் களமாகவும் விளங்குகின்றது. இங்கு அகழ்வாய்வுசெய்தபோது பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய மண்பானைகளின்சிறுபகுதிகளான ஓடுகள், மணிகள், வெளிநாட்டுக் காசுகள் போன்றனகிடைத்துள்ளன.பானை ஓடுகளில் தமிழில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வகைஎழுத்துக்கள் முதல் நூற்றாண்டைச் சார்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள்கருதுகின்றனர். மேலும் வெளிநாட்டுப் பெண்களின் கைரேகைகள் முதலியனவும்தென்படுகின்றன. முன்று வெளிநாட்டுக் காசுகள் கிடைத்துள்ளன. இவை ரோமன்நாட்டைச் சார்ந்தனவாகும். இக்காசுகளின் ஒரு பக்கத்தில் வெற்றிக் கடவுளும், மறுபக்கத்தில் ரோமன் நாட்டின் அரசர் ஒருவரின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு பழங்காலம் முதலே பெருமையுடன் இராமநாதபுர மாவட்டத்தில்அமைந்துள்ள அழகன் குளம் இருந்து வந்துள்ளது. தற்போது இதன் பெயர்அழகன்குளம் என மாறி உள்ளது. இதற்குக் காரணம் அழகர் கோயில் சார்புடையமக்கள் இங்குக் குடியேறிய போது இவ்வூருக்கு அழகன் குளம் என்ற பெயர்ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப் பெறுகிறது.


தகவல்களுக்கு நன்றி: Tamilnation.org, tn.arc.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக