திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 13 ஏப்ரல், 2009

பஜனைமடத்தெரு

யாதவர்கள் அதிகம் வசிக்கும் பஜனைமடத்தெரு, அழகன்குளத்தின் மூத்த பூர்வீகக் குடிகள் வசிக்கும் பகுதியாகும். ஆரம்ப காலத்தில் ஊரின் வடக்குப் பக்கத்தில் வசித்த அவர்கள், பிற்காலத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக அழகன்குளத்தின் தென்பகுதிக்கு குடியேறினார்கள். அது மட்டுமல்லாது நிலங்களையும் மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்தனர்.

இன்றும் அழகன்குளத்தின் விவசாயக்க் குடிமக்கள் இருப்பது பஜனைமடத்தெருவில்தான். மார்கழி மாதம் முப்பது நாளும் கண்ணன் கோவிலிலிருந்து பஜனை பாடிச் சென்று பாவை நோன்பு நோட்பவர்கள் வசிக்கும் பகுதியாகையால் அது பஜனைமடம் என்று அழைக்கப்பட்டது.

இன்று அந்த அளவிற்கு கூடுதல் சதவீதத்தினர் கலந்து கொள்ளவில்லையென்றாலும் சிறுவர் சிறுமியர் மார்கழி மாதத்தில் பஜனை பாடி ஊரைச் சுற்றி பிற கோவில்களுக்கும் சென்றுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக